Thursday, September 20, 2018

மலக்குழி மரணங்களை வெளிச்சப்படுத்தும் - சவக்குழி சிறுகதை

மலக்குழி மரணங்களை வெளிச்சப்படுத்தும் - சவக்குழி சிறுகதை






2018 ஜனவரி மாதப் புத்தாண்டுச் சிறப்பிதழாக வெளிவந்துள்ள காலச்சுவடு இதழில் பிரசுரமாகியுள்ள "சவக்குழி" என்ற வீரபாண்டியன் கணேசனின் சிறுகதை, சாக்கடைக் கால்வாய்களைச் சுத்தம் செய்யும் துப்புரவுத் தொழிலாளர்களில் ஒரு பிரிவினராகிய அருந்ததியச் சாதியைச் சார்ந்த மக்களின் பாடுகளை, அவலங்களை  விவரிப்பதாக வெளிவந்திருக்கிறது. மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளுவதற்கு தடைவிதித்து அச்சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ள இந்திய ஒன்றியத்தில் போதிய பாதுகாப்புச் சாதனங்கள்கூட இல்லாமல் குழிகளுக்குள் இறங்கி மூச்சடக்கி வேலை செய்யும் ஒடுக்கப்பட்டு ஒரங்கட்டப்பட்ட தலித் தூய்மைத் தொழிலாளி விசவாயு தாக்கி இறப்பதற்கு முன்பும் பின்பும் இயக்கம்பெறும்  நுண்னரசியலை இக்கதை கவனப்படுத்துகிறது.



அரசு ஊழியர்களாக துப்புரவுத் தொழிலாளர்களை ஏற்க மறுக்கும் அரசின் தீட்டுக் கொள்கை அத்தொழிலாளர்களை கான்ரக்டர்களுக்குக்கீழ் தினக் கூலிகளாக வேலை பார்க்கும் உதிரித் தொழிலாளர்களாக உருமாற்றியுள்ள இன்றைய பின்னைக் காலனிய  நடவடிக்கையை வீதிக்கொரு தலித் தலைவர்கள் முளைத்திருந்தாலும் தலித்துகள் ஆதரவற்றவர்களாக நடுவீதிகளில் அநாதைகளாக நிறுத்தப்பட்டுள்ளதன் திரைமறைவு அரசியலை வெளிச்சப்படுத்த முனைகிறது.




No comments:

Post a Comment

கழிசடை நாவல் மறுவாசிப்பும் சமகாலத் தேவையும்

  கழிசடை நாவல் மறுவாசிப்பும் சமகாலத் தேவையும் கொரோனா எனும் நோய்த்தொற்று இன்றைக்கு ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் இயக்க வெளியையும் தலைகீழாக்க...